பேரம் பேசுதல் நன்று - நுகர்வோர் விழிப்புணர்வு
பொருட்களை வாங்கி விற்கும் சந்தை அமைப்பு முறையில், நுகர்வோரை எப்படிப் பலப்படுத்துவது, காப்பது என்பதைப் பற்றி ஆராய்வதே நுகர்வோர் கல்வியின் நோக்கம். நுகர்வோர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இவை: 1) சிக்கலான அங்காடி முறை இன்றைய அங்காடி அமைப்பும் செயற்படும் முறையும் சிக்கலானதாக இருக்கிறது. ஒரே பொருள், பல்வேறு தரங்களில் கிடைக்கின்றன. அவற்றின் விலையிலும் பெரும் வேறுபாடு. சில பொருட்கள் அதன் பிராண்டுக்காக மட்டும் விலை கூடுதலாக இருக்கும். ஆனால், அதே தரம் கொண்ட பொருள், அதை விட பலமடங்கு விலை குறைவாக கிடைக்கும். பொருட்களின் சப்ளை திடீரென கூடவோ குறையவோ செய்யலாம். எதை, எப்போது, எங்கே வாங்குவது என்ற திட்டமிடல் நுகர்வோருக்குத் தேவை. 2) சரியான பயன்பாடு: - தொழில்நுட்பம் தொழில்நுட்ப வளர்ச்சியால், நாள்தோறும் புதுப்புது பொருட்கள் அங்காடிக்கு வருகின்றன. அவற்றைக் கையாளும் அறிவு நுகர்வோருக்கு அவசியம். உதாரணத்துக்கு, மைக்ரோவேவ் ஓவன் வாங்கிவிட்டு, அதை முறையாகப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் விபரீதத்தில் முடிந்துவிடும். அதனால், ஒரு பொருளை வாங்கும்போதே, அதன் விற்பனைக்குப் பின்னர் அதன் சேவை, தொழில்நுட்பக் க...